Friday, December 9, 2011

உன்னையே உருவாக்கு.......

அலைந்து  அலைந்து
அலுத்துவிட்டேன்  என்று
அலைகள்
ஒரு நொடியேனும்
ஓய்வெடுத்தது உண்டா...

சுற்றி சுற்றி
சோர்ந்து விட்டேன் என்று
பூமி
ஒரு நொடியேனும்
ஒதுங்கி நின்றதுண்டா...

உழைத்து உழைத்து
களைத்து விட்டேன் என்று
ஒரு நொடியேனும்
ஓய்வெடுத்ததுண்டா ....

இளமை நெருப்பை
இதயத்தில் சுமந்து கொண்டு
சோம்பல் இருளில் மூழ்குவதா......?

வாய்ப்பு வானம் விரிந்த பின்னும்
சிறகினை முடக்கி
உறங்குவதா....?!

வெற்றி கனிகள்
விருந்தாய் தெரிந்தும்
தோள்களை
உயர்த்த தயங்குவதா....?

வியர்வைக் கடலில்
வெற்றி முத்தெடுக்க
முயற்சியை முதலீடு செய்துவிடு...

உலகம் வழி காட்டட்டும்
என காத்திருந்தது போதும்
செயலில் இறங்கிவிடு
உலகிற்கு வழிகாட்டிட
உன்னையே உருவாக்கி விடு.........
                 -படித்ததில் பிடித்தது...

No comments:

Post a Comment